Posts

பேராசைக்காரி

 ஈரமான சாலை காதுகளையும் தரையையும்  குளிர வைத்த குளிர் காற்றின் அரவணைப்பு செவிபேசியில் பாடல் எதுவும் ஒலிக்கவில்லை ஆனாலும் எந்த இரைச்சலும் கேட்கவில்லை மெல்லிய மழைத் தூரல் துளித்துளியாய் ஈரம் சொட்டும் மரங்கள் எந்த உணர்வும் இல்லை நான் பயணிக்கிறேன் அவ்வளவு தான். ஒரு முகமும் பதியவில்லை துளி சலனமும் இல்லை மழைக்கே உரிய ஈரம் பூரிப்பைத் தவிர்த்து அந்த நொடி என்னில் ஏதும் இல்லை ஒரே ஒரு கேள்வியின் தேடல் உள்ளுக்குள் மின்னலென வெட்டி அப்படியே மறைந்தும் இருந்தது. நான் பேராசைக்காரியென நினைக்கிறேன் வாசம் இல்லாத மழையில் இவ்வளவு காதல் இருக்கக் கூடாது தான். இவையே தொடர்ந்திடுமென எதிர்பார்ப்பதும் வலியின் பட்டியலில் தான் நிற்கிறது. சிறிது கூட சலிக்காமல்  அந்த மழையைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுத் தனலை விடுவதும் எனக்கு புதியதில்லை தான். ஆனாலும் ஒரு வேண்டுதல் திடமாய் பலமாய் இருக்கிறது கொஞ்ச தூரமெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட போதாது. நெடுந்தூரம் இப்படியே.. அந்த மழையில் நனைந்து மழையோடு மழையாக கடந்திட வேண்டும் இவையெல்லாம் பேராசை இல்லையென நினைத்தால் உனக்கு புரியவில்லை. அவ்வளவு தான்...                              - மூன